This Article is From Nov 29, 2019

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே!

ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

New Delhi:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. தொடர்ந்து மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக உத்தவ் தாக்கரேக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் நேற்று செய்து வைத்தார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் துணை தேவைப்பட்டது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனா வலியுறுத்தி வந்தது.

எனினும், தனிப்பெரும் கட்சியான நாங்கள் எதற்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என பாஜவும் விடப்படியாக மறுத்தது. இதனால், பாஜவால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் உத்தவ் தலைமையிலான அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை உறுதி செய்யும் விதமாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகரக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் வால்ஸ் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

.