This Article is From Jul 25, 2018

பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கத் தயார்: உகாண்டாவில் மோடி பேச்சு

உகாண்டாவில் இருக்கும் பிரதமர் மோடி, ‘உகாண்டாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கத் தயார்’ என்று பேசியுள்ளார்

பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கத் தயார்: உகாண்டாவில் மோடி பேச்சு
Kampala:

உகாண்டாவில் இருக்கும் பிரதமர் மோடி, ‘உகாண்டாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கத் தயார்’ என்று பேசியுள்ளார். 

ஆப்ரிக்காவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று உகாண்டாவுக்குச் சென்றார். முன்னர் அவர் ரவாண்டாவுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். உகாண்டாவை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்குப் போக உள்ளார் மோடி.

உகாண்டா அதிபர் யோவேரி முஸ்வேனியை நேற்று சந்தித்த மோடி, இரு நாட்டு உறவு குறித்து கலந்துரையாடினார். 

இதையடுத்து இன்று பேசியுள்ள மோடி, ‘இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் இருக்கும் வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் லாபம் கொடுப்பதை உணரலாம். ஆனால், அதை முழுவதுமாக நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதைக் கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும். இந்தியாவுக்கு உகாண்டாவுக்கும் இடையில் இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் நல்ல சூழலை, வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாட்டுப் பொருளாதாரத்தையும் செழுமைப்படுத்த உகாண்டாவுடன் இணைந்து மனிதவளம் வளர்த்தல், திறன் வளர்த்தல், கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றில் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம். அப்படி செய்வதன் மூலம், ஆப்ரிக்க கண்டத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் உகாண்டா முன்னணியில் நிற்க முடியும்’ என்று பேசினார். 

உகாண்டாவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக இருந்த போது, மோடி உகாண்டாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்குது. 
 

.