This Article is From Oct 23, 2019

Kamlesh Tiwari Murder: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது; 15 முறை கத்திக் குத்து

Kamlesh Tiwari Murder: பிரதேச பரிசோதனை அறிக்கையில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலேஷ் திவாரியின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் புல்லட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

Kamlesh Tiwari Case: கடந்த காலங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவர் பேசியதற்காக இந்து குழுத் தலைவரை கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்து சமாஜ் கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி லக்னோவில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். தற்போது வெளியான பிரதேச பரிசோதனை அறிக்கையில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கமலேஷ் திவாரியின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் புல்லட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்தில் 2 ஆழமான காயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஒரு இனிப்பை கொடுக்க விரும்புவதாக கூறி கமலேஷ் திவாரி இரண்டு பேர்  காணச் சென்றனர். அவர்கள் அவரது வீட்டிற்கு நுழைந்தபோது அவர்களைத் தாக்கி பலத்த காயமடையச் செய்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

அஷ்பக் உசேன் (34), மொயூதீன் பதான் (27) ஆகிய இரு முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த காலங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவர் பேசியதற்காக இந்து குழுத் தலைவரை கொன்றதாகக் கூறப்படுகிறது. 

சூரத்தைச் சேர்ந்த இருவரையும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்தது.  திவாரி வீட்டிற்கு எடுத்துச் சென்ற இனிப்பு பெட்டியில் சூரத்தில் முகவரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைக்கு ஒரு நாள் முன்னதாக லக்னோ ஹோட்டலில் உண்மையான பெயர்கள் மற்றும் முகவரிகளின் கீழ் பதிவு செய்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்து முடித்த பின் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று உடைகளை மாற்றி விட்டு சூரத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

.