This Article is From Nov 26, 2018

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச.18 வரை தடை நீட்டிப்பு!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டிச.18 வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரி உள்ளது.

New Delhi:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோருகிறது. மேலும், இது தொடர்பாக சிபிஐ தரப்பில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் வெளிநாடுகளில் உள்ள இவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது 

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

4ol635s8

சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ப.சிதம்பரம் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவின் மீது சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அவர் மீது சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, “ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

அதுமட்டுமின்றி, “அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உள்ள கால வரையறைக்குள் விசாரித்து முடிப்பது மிகவும் சிரமம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச.18 வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

.