This Article is From Aug 26, 2018

“தேர்தல் வரும் போது பார்த்து கொள்வோம்” மு.க அழகிரி பேட்டி

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரை முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்

“தேர்தல் வரும் போது பார்த்து கொள்வோம்” மு.க அழகிரி பேட்டி
Chennai:

திமுக தலைவர் பதிவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைப்பெற்றது. திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரை முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து, வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரை முருகனும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் தேர்தலில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய சொல்கிறீர்களா? என்று மு.க அழகிரி கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம் எனவும் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவரின் உண்மையான விசுவாசிகள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்னர் அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.​

.