This Article is From Nov 07, 2018

அருணாச்சலில் இந்தியர ராணுவத்துடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருணாசல பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

அருணாச்சலில் இந்தியர ராணுவத்துடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் நிர்மலா சீதாராமன்

Itanagar:

அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாளியை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருணாசல பிரதேசத்தில் ராணுவத்துடன் பண்டிகையை கொண்டாடினார்.

அஞ்சாவ் மாவட்டத்தில் ஹயுலியாங் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன் பின்னர் எல்லையின் முன் பகுதியில் உள்ள லோஹித் பள்ளத்தாக்கு கிராமங்களுக்கு சென்று, அங்கு இந்திய எல்லையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்திலும், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக நிர்மலா சீதார ராமன் ஆய்வு நடத்தினார்.

பாதுகாப்பு அமைச்சருடன் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவானே உடன் இருந்தார்.

.