This Article is From Jul 28, 2020

தமிழகத்தில் கொரோனா: சென்னையில் 1000-யும், விருதுநகரில் 500-யும் தாண்டிய தொற்று எண்ணிக்கை!

கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 61,153 சோதனைகளை செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா: சென்னையில் 1000-யும், விருதுநகரில் 500-யும் தாண்டிய தொற்று எண்ணிக்கை!

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 130 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் தொடர்ந்து இன்றும் 1000 பேருக்கு மேல் பாதிப்பு
  • திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களிலும் பாதிப்பு விகிதம் அதிகம்
  • மேற்கு மாவட்டங்களில் குறைவான கொரோனா பாதிப்பே உள்ளது

தமிழகத்தில் இன்று 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,107 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,27,688 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,707 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,66,956 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 57,073 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,659 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

தமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 577 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 61,153 சோதனைகளை செய்யப்பட்டன. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 130 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. அதைத் தொடர்ந்து கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முறையே 156 மற்றும் 160 பேருக்கு கொரோனாவிலிருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


    
 

.