This Article is From Apr 02, 2020

தமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியாக விவரம்!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 234 –ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியாக விவரம்!!

ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 234 ஆக உள்ளது

தமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 124 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். அவர்களுடன் சேர்த்து மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்மாவையும், ஒருவர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்கள்.

மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பதை பார்க்கலாம்..

நெல்லை             - 29

கோவை               - 29

சென்னை             -26

ஈரோடு                 - 26

தேனி                    - 20

நாமக்கல்             - 18

திண்டுக்கல்         - 17

மதுரை                  - 15

செங்கல்பட்டு    - 11

திருப்பத்தூர்        - 7

சேலம்                   - 6

கன்னியாகுமரி   - 5

சிவகங்கை           - 5

விழுப்புரம்         - 3

தூத்துக்குடி          - 3

கரூர்                       - 2

திருவாரூர்            - 2

காஞ்சிபுரம்         - 2

திருவண்ணாமலை - 2

தஞ்சாவூர்             - 1

ராணிப்பேட்டை - 1

விருதுநகர்           - 1

திருப்பூர்               - 1

வேலூர்                 - 1

.