This Article is From Jan 20, 2020

பெரியார் குறித்த பேச்சு: ’பத்தவச்சிட்டியே பரட்டை’ - ரஜினியை கலாய்த்த ஜெயக்குமார்!

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

பெரியார் குறித்த பேச்சு: ’பத்தவச்சிட்டியே பரட்டை’ - ரஜினியை கலாய்த்த ஜெயக்குமார்!

பெரியார் பற்றிய சர்ச்சை பேச்சை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கொண்டு வர முடியாது. இதை தெரிந்து இருந்தும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று கருதி மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும். அவருடைய 16 வயதினிலே படத்தின் வசனம் போன்று பத்தவச்சிட்டியே பரட்டை என்பதைப் போன்று பழைய கருத்துக்களை பேசி பிரச்சனையை எழுப்பக்கூடாது என்றும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும் என்றும் கூறினார்.

.