This Article is From Aug 11, 2020

பாஜகவுக்கு சாட்டையடி: சச்சின் பைலட்டும், முதல்வரும் மகிழ்ச்சி: கே.சி.வேணுகோபால்

இது உண்மையில் பாஜகவின் தவறான செயலுக்கு கிடைத்த பாடமாகும்

பாஜகவுக்கு சாட்டையடி: சச்சின் பைலட்டும், முதல்வரும் மகிழ்ச்சி: கே.சி.வேணுகோபால்

இது உண்மையில் பாஜகவின் தவறான செயலுக்கு கிடைத்த பாடமாகும்

New Delhi:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்டு முரண்பாடு காரணமாக மாநில அரசை விளிம்பு நிலைக்கு தள்ளிய சச்சின் பைலட் தற்போது காங்கிரஸூடன் உடன்படிக்கை மேற்கொண்டது பாஜகவின் 'ஜனநாயக விரோத' போக்குக்கு அளித்த சாட்டையடி என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

அதிருப்தி எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர். 

பைலட்டும், முதல்வரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாஜகவின் 'ஜனநாயக விரோத' போக்குக்கு அளித்த சாட்டையடி ஆகும். அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நாசமாக்குபவர்கள். இது உண்மையில் பாஜகவின் தவறான செயலுக்கு கிடைத்த பாடமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன. ஆளும் காங்கிரஸ் அரசின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கியதோடு, தனது ஆதரவு எம்எல்ஏக்களை தனியே பிரித்து அதிருப்தி அணியை உருவாக்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முதல் முறையாக அவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். இதன் தொடர்ச்சியாக அசோக் கெலாட்டுடனான, சச்சின் பைலட்டின் அனைத்து சிக்கலைகளையும் முடிவுக்கு கொண்டுவர ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலாட், “நாங்கள் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளோம்... எனக்கு பொருந்தாத எதையும் நான் ஒருபோதும் சொல்லவில்லை அல்லது செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அசோக் கெலாட் முதல்வராக நியமிக்கப்பட்டார். நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். எனது பிரச்சினைகளை ஊடகங்களுக்கு முன்னால் பேச நான் விரும்பவில்லை.” என்று அவர் கூறினார். 

.