This Article is From Sep 06, 2019

'கவின்-லாஸ்லியா' ஷோ ஓவர், இனி 'தர்சன்-செரின்' ஷோவா?

Bigg Boss 3: கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் குறைந்ததை தொடர்ந்து, இந்த வாரம் சாக்க்ஷி, மோகன் வைத்யா மற்றும் அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

'கவின்-லாஸ்லியா' ஷோ ஓவர், இனி 'தர்சன்-செரின்' ஷோவா?

Bigg Boss Tamil 3: அப்போ போன வாரம், கவின்-லாஸ்லியா, இந்த வாரம் செரின்-தர்சனா?

Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் மிகவும் மந்தமாகவே கடந்தது. அந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் தவிர்த்து பிக் பாஸின் கேமராக்கள் எப்போது கவின்-லாஸ்லியா என இவர்கள் இருவர்மீதே இருந்தது. அவர்கள் நின்றால், நடந்தால், அமர்ந்தால் என எல்லா நேரமும் கேமராவின் கண்கள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் 'ஐயோ வேற எதாவது இருந்தா காட்டுங்கடா' என்ற கதறல் பிக் பாஸ் காதுகளை கிழித்திருக்கும்போல. அதற்கான அடியை போன வார கடைசியிலேயே போட்டார் பிக் பாஸ். வீட்டில் இருந்த அனைவரிடமும், முன்னதாக வெளியில் சென்றவர்களில் ஒருவர் உள்ளே வர வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்க, சேரன் சொன்ன அந்த சென்சார் செய்யப்பட்ட பெயரை தவிர. சாக்க்ஷி, அபிராமி, மோகன் வைத்தியா என்று மூன்று பேரையும் உள்ளே அனுப்பி ஷாக் கொடுத்தார். இவர்கள் உள்ளே வந்தபின், 'கவின்-லாஸ்லியா' ஷோ முடிவடைந்து, வனிதாவின் உதவியுடன் இந்த வாரம் பிக் பாஸின் கண்கள் 'தர்சன்-செரின்' பக்கம் திரும்பியுள்ளது.

d5p4fu28

விருந்தினர்களாக வந்த சாக்க்ஷி, மோகன் வைத்யா, அபிராமி!

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் குறைந்ததை தொடர்ந்து, இந்த வாரம் சாக்க்ஷி, மோகன் வைத்யா மற்றும் அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். வீடு கலைகட்டப் போகிறது என்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு, எந்த வித குறையும் இல்லாமல், இந்த மூவரின் வருகை அமைந்திருந்தது. அந்த சவாரஸ்சியத்தை சற்றும் கூட குறையவிடாமல், வீட்டில் இருந்தவர்கள் இரு அணிகளாக பிறித்து, இந்த மூவரையும் நடுவராக அமர்த்து விவாத மேடையை நடத்தினார். அந்த விவாத மேடையும் சிறப்பாகவே நடைபெற்றது. இன்னிலையில் சாக்க்ஷி, மோகன் வைத்யா மற்றும் அபிராமி தலைமையில் இன்று விருது வழங்கும் விழாவையும் நடத்தியிருக்கிறார். துவக்கத்திலேயே, பச்சோந்தி விருதை லாஸ்லியாவிற்கு அளித்ததன் விளைவாக, இன்றைய நாளும் ஒரு சம்பவத்துடனே கழியவுள்ளது.

dphnt4k

வனிதா - செரின் மோதல்!

இன்னிலையில் சாக்க்ஷி உள்ளே வந்தால், சண்டை வெறொருவருடன் இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இங்கோ பிரச்னை தலைகீழாக மாறிவிட்டது. இத்தனை நாள், 'கவின்-லாஸ்லியா' ஷோவாக இருந்த பிக் பாஸ் வீடு, கடந்த இரண்டு நாட்கள்  'தர்சன்-செரின்' ஷோவாக மாறிவிட்டது. தர்சன்-செரின் என்பதை தாண்டி, செரின் மற்றும் அவரது அழுகை மட்டும்தான் நிகழ்ச்சியை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது. செரினை தவிர்த்து இந்த இடத்தில் மற்றொருவரும் கேமராவின் கவணத்தை பெற்றிருக்கிறார், வனிதா, இந்த பிரச்னையின் துவக்கம் இவரிடமிருந்துதான்,

கடந்த சில நாட்களில், வனிதா செரின்-தர்சன் என இருவரை பற்றி பேசாத நாளே இல்லை. முந்தைய நாள் இரவு, சாக்க்ஷி, சேரன் முன்னிலையில் மீண்டும் இந்த விவாதம் எழுந்தது. அப்போது, செரின் 'தர்சன் பத்தி இனிமேல் என்கிட்ட பேசாதீங்க' என்று கோவப்பட்டார். அந்த இடத்தில் இது முடிவடையவில்லை. அடுத்த நாள் கலையிலும் தொடர்ந்து. டாஸ்க் காரணமாக செரின் மத்திய உணவு தயார் செய்யவில்லை என்ற விவாத்தின்போது, வனிதா மீண்டும் தர்சன் குறித்த வாதத்தை வைத்தார். மீண்டும் செரினின் கோவத்தில் முடிந்தது. அந்த விவாதத்தில், வனிதா ஒரு கட்டத்தில் சேரனையே கோவப்படுத்திவிட்டார். சேரன் சிறிச்சு பார்த்திருப்பீங்க, அட்வைஸ் பண்ணி பாத்திருப்பீங்க, சோகமா இருந்து கூட பார்த்திருப்பீங்க, ஏன் அழுது கூட பார்த்திருப்பீங்க, கோவப்பட்டு பார்த்திருக்கீங்களா? நேற்றைய நாளில் பார்க்க வைத்து விட்டார் வனிதா.

அந்த பிரச்னை அங்கேயேயும் முடியவில்லை. அடுத்து சாக்க்ஷி, வனிதா, செரின் மூவறும் தனியாக அமர்ந்து பேசினர். அப்போது வனிதா பேச, அனைத்திற்கும் சாக்க்ஷி 'ஹ்ம்ம்' கொட்ட, ஒரு கட்டத்தில் தர்சன்மீது செரினிற்கு காதல் உள்ளது என வார்த்தையை விட்டார் வனிதா. அங்குதான் விவாதம் அடுத்த நிலையை அடைந்து, கோவத்தில் கத்திக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் செரின். இது வெறும் ட்ரைலர்தான், மெய்ன் பிக்சர் இன்னும் இருக்கு என்று மூன்றாவது ப்ரோமோவில் ஹின்ட் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். சேரன் மேசையை துடைத்துக்கொண்டிருக்க, "உங்களுடன் உங்கள் அணியில் வேலை செய்ய சேர்க்கப்பட்ட ஆள் இங்க இல்ல, வந்து வேலை பண்ணல, அதை நீங்க கேட்டுக்கோங்க" என்று வனிதா ஆரம்பிக்க திரும்பவும் அதே பிரச்னை.

அப்போ போன வாரம், கவின்-லாஸ்லியா, இந்த வாரம் செரின்-தர்சனா?

.