This Article is From Oct 29, 2019

70 அடிக்கும் கீழே சென்ற குழந்தை: ஆழ்துளை கிணற்றில் மண் சரிவு: மீட்பு பணியில் சிக்கல்!

70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

70 அடிக்கும் கீழே சென்ற குழந்தை: ஆழ்துளை கிணற்றில் மண் சரிவு: மீட்பு பணியில் சிக்கல்!

நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தலையை சுற்றி மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுஜித் 70 அடிக்கு கீழ் சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் கயிறு கட்டி குழந்தையை மீட்க முயற்சிக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. இதில், துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து வேகமாக கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது. 

இதனிடையே, குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் மீட்புக்குழுவினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டினர். குழந்தையை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரியும் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது. சுஜித்தின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை என்றும் இருப்பினும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என  அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

.