இரண்டு சூறாவளிகள் வந்திருப்பதாகவும் அவை மணிக்கு 155 கிமீ வேகத்தில் காற்று வீசி மழையுடன் தாக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு புயல்கள் அந்தப் பகுதியை தாக்க உள்ளதால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர். இந்த வார இறுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி.என்.என் தகவலின்படி ஆஸ்திரேலியா மெட்ரோலாஜிக்கல் துறை, இரண்டு சூறாவளிகள் வந்திருப்பதாகவும் அவை மணிக்கு 155 கிமீ வேகத்தில் காற்று வீசி மழையுடன் தாக்க போவதாகவும் கூறியுள்ளது.
ட்ரேவர் பகுதியில் வரோனிகா புயல் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டது.அடுத்த புயல் ஞாயிறன்று தாக்கும் என்று கூறப்படுகிறது.