This Article is From Jun 18, 2018

ரமலான் சுற்றுலா சென்றபோது நடந்த விபத்து… 34 பேருக்கு படுகாயம்!

ரமலான் பண்டிகையை ஒட்டி மேகமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரமலான் சுற்றுலா சென்றபோது நடந்த விபத்து… 34 பேருக்கு படுகாயம்!

ஹைலைட்ஸ்

  • மேகமலைக்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது
  • 34 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
  • இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறது போலீஸ்

ரமலான் பண்டிகையை ஒட்டி மேகமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தமாளையத்திலிருந்து 34 பேர் சின்னமலை அருகேயுள்ள மேகமலைக்கு ரமலான் பண்டிகையை ஒட்டி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது, அவர்கள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் 34 பேருக்கு படுகாயமடைந்துள்ளது. இதையடுத்து, போலீஸுக்கு விபத்து குறித்து தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்பகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அனைவரையும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் காவல் துறையினர். 

இதையடுத்து மிகவும் அதிகமாக காயமடைந்த 27 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 6 குழந்தைகள், 16 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

.