This Article is From Dec 31, 2018

செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த சோகம்..!

250 நபர்களுக்கு மேல் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்!

செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த சோகம்..!

நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்ட மாணவன்.

Mayurbhanj:

ஒடிசாவில் உள்ள மாயூர்பாஞ் என்னும் இடத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவன் அப்போது செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது தவறி விழுந்ததால் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

கதக்கை சேர்ந்த ரோகோன் மிஷ்ரா என்னும் அந்த மாணவன், தவறி விழுந்து தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட காட்சியை அருகில் இருந்து பார்த்தவர்களை மிகவும் பாதித்தது. பலர் நீர்வீழ்ச்சியின் இறுதிக்கு சென்று மாணவனை மீட்டு விடலாம் என முயன்றும் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட கருத்து கணிப்புப்படி செல்ஃபி எடுக்க முயன்றதால் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 250 போர் பலியானதாக தகவல் வெளியானது. மேலும் இதுபோன்ற மரணங்களில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

.