This Article is From Feb 26, 2019

‘எல்லை தாண்டிய இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தோம்!’- தாக்குதலை மறுக்கும் பாக். ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

‘எல்லை தாண்டிய இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தோம்!’- தாக்குதலை மறுக்கும் பாக். ராணுவம்

விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது
  • தீவிரவாத முகாம்கள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்
  • இத்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. 

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு முகாம்கள் மீதுதான் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த மொத்த தாக்குதல் குறித்தும் பாகிஸ்தான் தரப்பு வேறொரு கதையை சொல்கிறது. அந்நாட்டின் ராணுவத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீஃப் கஃபூர், அவரது ட்விட்டர் பதிவில், ‘இந்திய விமானப்படை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியது. இதையடுத்து பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுத்தது. இந்திய விமானங்கள் இந்தத் தாக்குதலை அடுத்து திரும்பிச் சென்றன. 

முசாஃபர்பாத் செக்டரிலிருந்துதான் இந்தியத் தரப்பு எல்லைத் தாண்டி வந்தது. உடனடியாக பாகிஸ்தான் தரப்பு அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. இந்திய விமானங்கள் மீது வீசப்பட்ட குண்டுகள், எதன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தரையில் விழுந்தன. இந்தத் தாக்குதலினால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை' என்று பதிவிட்டுள்ளார். 

 

மேலும் படிக்க - எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்து இந்திய விமானப்படை அதிரடி!

.