This Article is From Dec 27, 2018

தாயையும் மகனையும் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று, கால்வாயில் விழுந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்

தாயையும் மகனையும் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்
New Delhi:

டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று, கால்வாயில் விழுந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன்படி போலீஸார் விசாரணைக்கு பிறகு வந்த தகவல் படி பாலத்தின் மீதுதிருந்து ஒரு பெண் குதிக்க முயன்றதை கண்ட ஆட்டோ ஓட்டுனர் சற்றும் யோசிக்காமல் தண்ணீருக்குள் சற்றும் யோசிக்காமல் குதித்தார். அதுமட்டுமின்றி அருகில் இருந்தவர்களையும் உதவிக்கு அழைத்தார்.

மேலும் பலர் உதவி செய்ய வந்த்தால், தண்ணீரில் விழுந்த குழந்தை மற்றும் தாயை காப்பாற்றினார்கள். இந்நிலையில் அவர்களை காப்பாற்ற தண்ணீரில் குதித்த ஆட்டோ ஓட்டுனரை காணவில்லை என்பதால் போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர். தேடிய பிறகும் அந்த ஓட்டுனரின் உடலை இன்னும் மீட்க முடியவில்லை.

காப்பாற்றபட்ட பெண் மற்றும் அவரது மகன் மருத்துவமணையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். மேலும் அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அவரது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இத்துயர சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுனரின் பெயரை ‘ஜாவான் ராக்ஷா' வீரசாதனை விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

.