This Article is From Jul 05, 2018

பெங்களூரு இரவு நேர பப்பில் இருந்து 32 பெண்கள் மீட்பு

பெங்களூரில் உள்ள ஒரு பப்பில் போலீஸாரின் சோதனையில் 32 பெண்கள் மீட்கப்பட்டனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு இரவு நேர பப்பில் இருந்து 32 பெண்கள் மீட்பு
Bengaluru:

இந்திராநகரில் 80-அடி சாலையில் உள்ள ஒரு பப்பில் போலீசார் சோதனை செய்தனர். அந்த இடத்தில் பல பிரபலமான விடுதிகள், இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

பெங்களூரில் உள்ள ஒரு பப்பில் போலீஸாரின் சோதனையில் 32 பெண்கள் மீட்கப்பட்டனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பல பிரபலமான விடுதிகள், இரவு விடுதிகள், பப்களுக்கு பிரபலமான இடம் இந்திரா நகர். அங்குள்ள ஒரு பப்பில் போலீசார் சோதனை செய்தனர் பப்பில் உள்ள பெண்களை ஆபாசமான ஆடைகளை அணிய வைத்து, ஒழுங்கற்ற செயல்களைச் செய்ய வைத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஜீவன்பீமா நகர் போலீஸ், அந்த பப் நிர்வாகத்திற்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்துள்ளது.

“இந்திராநகரில் 80-அடி சாலையில் உள்ள ஒரு பப்பில் போலீசார் சோதனை செய்து,ஆபசமான ஆடைகள் அணிய வைத்து, தகாத செயல்களை செய்ய வைத்த நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து, அங்கு இருந்த 32 பெண்களை மீட்டுள்ளனர் , என்று பெங்களூரில் உள்ள காவல் துறையை சேர்ந்த துணை ஆணையர் அஜய் ஹிலூரி ட்விட்டரில் தெரிவித்தார்.


 

.