This Article is From Sep 01, 2018

ஆசிய விளையாட்டு: 15வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

14வது நாளான இன்று, பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது

ஆசிய விளையாட்டு: 15வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 14வது நாளான இன்று, பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது

ஆண்களுக்கான பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில், இந்தியாவின் பர்தன் பிரனாப், சர்கார் ஷிப்நாத் ஆகியோர் முதல் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தோனேஷியாவும் கைப்பற்றியுள்ளனர்

இதன் மூலம், 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 15வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஒரே நாளில் இன்று, இந்தியா 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இதுவரை, 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 67 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது
 

.