This Article is From Nov 20, 2018

“பொதுத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும்” - விளாசும் ராகுல்

மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசி வருகிறார்

“பொதுத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும்” - விளாசும் ராகுல்

வடகிழக்கு மாநிலங்களில் மிசோரத்தில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

Champhai:

மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினார்.

மிசோரம் மாநிலம் சம்பாய் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

மிசோரம் மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் மூலமாகத்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

மிசோரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் மிசோரம் தேசிய முன்னணி பாஜகவின் கூட்டாளியை போல செயல்படுகிறது. மாநிலத்தின் கலாசாரம், மொழி, பாரம்பரியம், வரலாறு உள்ளிட்டவற்றை அழிக்க பாஜகவுடன் மிசோரம் தேசியமுன்னணி முயன்று வருகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

.