‘சட்டவிரோதமாக குடியேறிய’ ராணுவ வீரர்..!?- தேசிய அளவில் புயலைக் கிளப்பிய வழக்கில் ட்விஸ்ட்

PUBLISHED ON: June 4, 2019 | Duration: 4 min, 59 sec

facebooktwitteremailkoo
loading..
இந்திய ராணுவத்தில் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய முகமதுசனவ்லா என்பவர், சட்டத்துக்கு விரோதமாக குடியேறியிருப்பவர் என்று பகீர் புகார்சுமத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்னர்சிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது புகார்கொடுத்ததாக கூறப்படும் 3 பேர், “இந்த வழக்குதொடர்பாக எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சந்திரமால் தாஸ் என்பவர்தான் இந்தவழக்கை விசாரித்து வருகிறார். அவர் வேண்டுமென்றே இந்தவழக்கில் தவறான தகவல்களை அளித்துள்ளார்” என்று கூறி அதிகாரி சந்திரமால்தாஸ் மீது காவல் துறையிடம்புகார் அளித்துள்ளனர். முகமது சனவ்லா, சுமார் 30 ஆண்டுகள்இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து அவர்அசாம் எல்லைப் பாதுகாப்புப் படையில்அதிகாரியாக சேவை செய்தார். அவர்மீது ‘சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியுள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த விஷயம் குறித்துவிசாரணை அதிகாரியான சந்திரமால் தாஸ், NDTV-யிடம் பேசும்போது, “நான்முகமது சனவ்லா குறித்து விசாரணைசெய்யவில்லை. நான் விசாரணை செய்தநபரின் பெயரும் சனவ்லா என்பதுகுறிப்பிடத்தக்கது. அவருக்கு பதில் இவர் மீதுதவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” என்றுவிளக்கம் கொடுத்துளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com