This Article is From Jul 14, 2018

கணவனின் சந்தேக குணத்தால் 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

மதுரையில் கணவனின் சந்தேக குணத்தால் மனமுடைந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கணவனின் சந்தேக குணத்தால் 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்
Madurai:

மதுரையில் கணவனின் சந்தேக குணத்தால் மனமுடைந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சத்யசாய் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு ஹரிசுதா என்கிற 4 வயது மகளும், ஹரீஷ் கிஷோர் என்கிற 3 வயது மகனும் உள்ளனர்.

ராஜா தனது மனைவி ஜீவா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால், மனமுடைந்த ஜீவா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது, குழந்தைகள் இருரையும் பாலிதீன் பையால் முகத்தை மூடி கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு ஜீவாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் ஜீவா எழுதி இருந்த தற்கொலைக் கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் தனது கணவரின் சந்தேக நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக ஜீவா எழுதி இருந்தார்.

இதனையடுத்து ராஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.