This Article is From Nov 15, 2018

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை

5 மாநில தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தாமதம் ஆகிறது

New Delhi:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தொடங்கி வரும் ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி நேற்று நடைபெற்றது. ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் முடிவில் டிசம்பர் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதிவரை கூட்டத்தை நடத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி இருக்க வேண்டும்.

ஆனால், 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 

.