This Article is From Dec 03, 2018

'மழை பெய்யுமா… பெய்யாதா..?’- வானிலை மையம் என்ன சொல்கிறது

அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு பரவலாக மிதமான மழை தொடரும். ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது

'மழை பெய்யுமா… பெய்யாதா..?’- வானிலை மையம் என்ன சொல்கிறது

கடந்த ஒரு வாரத்துக்கும் மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

மழை குறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், ‘இன்று தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

கனமழையைப் பொறுத்தவரையில், கடலோர தமிழகத்தில் எதிர்பார்க்கலாம். சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு பரவலாக மிதமான மழை தொடரும். ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் நாளை தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்று தகவல் தெரிவித்தார்.

.