This Article is From Nov 10, 2018

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என திமுகு தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்: மு.க.ஸ்டாலின்

துறையூரில் திமுக எம்எல்ஏ ஸ்டாலின் குமாரின் திருமணத்தை நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திய பின்னர் பேசியதாவது, மத்திய பாஜக அரசையும், அதிமுக ஊழல் ஆட்சியையும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் நடப்பது அடிமை, ஊழல் ஆட்சி. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். கட்சி உறுப்பினர்கள் ஒரு மகத்தான வெற்றிக்கு வேலை செய்ய வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகிறது. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளும் திமுகவுடன் கரம்கோர்த்து அரசியல் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை என்னை சந்திக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி சந்திக்க வருகிறார்.

பாஜக ஆட்சியை அகற்ற திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இது நாம் கருணாநிதி லட்சிய பாதையில் உறுதியாக செல்வதை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

.