கரடி இரண்டு மாநில அதிகாரிகளிடமிருந்தும் தப்பியது.
கரடி ஒன்று பெனிசில்வேனியாவிலிருந்து டெலவேர் வரை அலைந்து திரிந்து கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அதை காவல்துறையினர் வெற்றிகரமாக பிடித்துள்ளனர்.
வீட்டின் பின்புறத்தில் எந்தவொரு அச்சமும் இன்றி கரடி உலாவதை பார்க்க முடிகிறது. டெலாவேர் சமூக ஊடகத்தில் இந்த கரடி மிகவும் பிரபலமாகிவிட்டது . #Delabear என்ற கேஷ் டேக்குடன் பலரும் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த கரடி சமூக ஊடகங்களில் பல நகைச்சுவைகளையும் மீம்ஸ் உருவாகவும் வழி வகுத்தது. அதிகாரிகள் கரடியை ஒருவாரமாக தேடி வருகின்றனர். ஆனால் கரடி இரண்டு மாநில அதிகாரிகளிடமிருந்தும் தப்பியது.
கரடி பயத்தில் ஓரிடத்திலும் தங்காமல் ஓடுவதால் வன விலங்கு அதிகாரிகள் பிடிக்க மிகவும் சிரமப்பட்டனர். பின் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு மயக்கமுறச் செய்து பிடித்தனர். பின் அலபோகாஸ் காடுகளில் கரடியை விட்டுச் சென்றனர். கரடியை பிடிக்க அரசு பூங்கா ஒருநாள் மூடப்பட்டது.
Click for more
trending news