This Article is From Sep 20, 2019

Bigil audio launch: சுபஸ்ரீ விவகாரம்: கோபப்பட்ட விஜய்! - ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்!

சென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார். 

Bigil audio launch: சுபஸ்ரீ விவகாரம்: கோபப்பட்ட விஜய்! - ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்!

நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார் என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு!

சுபஸ்ரீக்காக கோபப்பட்ட நடிகர் விஜய்க்கு ஆதரவாக, நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார் என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

சென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார். 

அத்துடன், சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என்றும் விஜய் தெரிவித்தார்.

இந்நிலையல், சுபஸ்ரீ குறித்து விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அவர்கள் கருத்துகள் ஏற்கப்படும் ஆனால் தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது. 

யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் என்று நடிகர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது. நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பிக்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.

.