This Article is From Jun 26, 2019

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து ஓடவிட்ட பாஜக எம்.எல்.ஏ.! வைரல் வீடியோ!!

பொதுமக்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சம்பவம் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து ஓடவிட்ட பாஜக எம்.எல்.ஏ.! வைரல் வீடியோ!!

அதிகாரிகளை பேட்டால் அடித்து விரட்டிய பாஜக மூத்த தலைவரின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் விஜய்வர்கியா.

Indore:

மத்திய பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் -3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக உள்ளாட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 


''அப்போது 5 நிமிடத்தில் அதிகாரிகள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு'' என்று எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்ட ஆரம்பித்தார். 

அடியை பொறுத்துக் கொள்ள முடியாமல் 2 அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆகாஷ் விஜய் வர்கியா கூறியதாவது-

நான் அதிகாரிகளிடம் 10 நிமிடத்தில் வெளியேறுமாறு கூறினேன். அதை அவர்கள் கேட்கவில்லை. நான் ஒரு மக்கள் பிரதிநிதி. மக்கள் பிரச்னைகளை அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைப்பதுதான் எனது வேலை. இதை சுமுகமாக முடிக்க என்னால் முடிந்த முயற்களை மேற்கொண்டேன். ஆனால் அதிகாரிகள் தாதாக்களை போல செயல்பட்டனர். மக்களின் கருத்துக்களை கேட்க விரும்பவில்லை. இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. நடப்பதை பார்ப்போம்'' என்றார். 

ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.