This Article is From Sep 25, 2018

துணை ஜனாதிபதி, தமிழக முதலமைச்சர் திருப்பதியில் சந்திப்பு

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருமலைக்கு சென்றார்

துணை ஜனாதிபதி, தமிழக முதலமைச்சர் திருப்பதியில் சந்திப்பு

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருமலைக்கு சென்றார்.

இதைப்போல, திருமலையில் தரிசனம் செய்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது வெங்கையா நாயுடுவை சந்தித்த தமிழக முதலமைச்சர், அவருக்கு பொன்னாடை போர்த்தினார்.

அதனை தொடர்ந்து, இரு தலைவர்களும் சில நிமிடங்களுக்கு பேசியுள்ளனர். மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் சந்தித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.