This Article is From Jun 06, 2020

சென்னையில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு - மண்டலவாரியாக தீவிரமடையும் தொற்று!

ஜூன் 6 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 19,826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு - மண்டலவாரியாக தீவிரமடையும் தொற்று!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,156 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,116 பேர். ஒட்டுமொத்த அளவில் 28,694 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 861 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 15,762 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 12,697 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 232 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (05.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 731

மணலி - 274

மாதவரம் - 536

தண்டையார்ப்பேட்டை - 2,470

ராயபுரம் - 3,552

திரு.வி.க நகர் - 1,958

அம்பத்தூர் - 753

அண்ணா நகர் - 1,784

தேனாம்பேட்டை - 2,245

கோடம்பாக்கம் - 2,202

வளசரவாக்கம் - 996

ஆலந்தூர் - 314

 அடையாறு - 1,094

பெருங்குடி - 365

சோழிங்கநல்லூர் - 362

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 210

ஜூன் 6 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 19,826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,156 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 178 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 9,282 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 2,479 மற்றும் 2,245 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 274 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

.