This Article is From Nov 08, 2018

3 சிறுமியின் வாய்க்குள் ‘பாம்’வெடி வைத்த சிறுவன் - 50 இடங்களில் தையல்

சிறுமியின் வாயில் வெடி வெடித்தால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஐ.சி.யு.வில் வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

3 சிறுமியின் வாய்க்குள் ‘பாம்’வெடி வைத்த சிறுவன் - 50 இடங்களில் தையல்

தப்பிச் சென்ற சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Lucknow:

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது சிறுமியின் வாய்க்குள் பச்சை நிறமுள்ள வெடியை வைத்து சிறுவன் ஒருவர் வெடிக்கச் செய்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மீரட்ட மாவட்டத்தின் மிலாக் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு சசி குமார் என்பவருக்கு 3 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தீபாவளிக்கு முந்தைய தினமான புதன் கிழமை அன்று அவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, பக்கத்து வீட்டு இளைஞர் ஹர்பால் என்பவர் தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதில் ஈடுபட்டார். சிறுமியை பார்த்ததும், அவரது வாய்க்குள் பச்சை நிறம் கொண்ட பாம் வெடியை திணித்து, அதை ஹர்பால் பற்ற வைத்தார்.

வெடி வெடித்ததில் சிறுமியின் வாய் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 50 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஹர்பால் தப்பித்துச் சென்றுவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

.