This Article is From Oct 22, 2018

ஜெய்ப்பூரில் கூட்டு பலாத்காரம்!? - நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த பெண்

ஜெய்ப்பூரில் 23 வயதுடைய நேபாள பெண்ணை, இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்துள்ளது காவல் துறை

ஜெய்ப்பூரில் கூட்டு பலாத்காரம்!? - நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த பெண்

பாதிக்கப்பட்டப் பெண், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். (கோப்புப் படம்)

ஹைலைட்ஸ்

  • Two men were arrested for allegedly gang-raping the woman from Nepal
  • The survivor jumped naked from the third floor of an apartment
  • She is currently undergoing treatment at Jaipuria hospital
Jaipur:

ஜெய்ப்பூரில் 23 வயதுடைய நேபாள பெண்ணை, இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்துள்ளது காவல் துறை.

பாதிக்கப்பட்டப் பெண் அளித்த புகாரின் பேரில், 19 வயதுடைய லோகேஷ் சயினி மற்றும் 24 வயதுடைய கமல் சயினி ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளதாக தெற்கு ஜெய்ப்பூர் ஏசிபி கேகே அவாஸ்தி தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கழமை ஆகிய இரண்டு நாட்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆண்கள், நேபாள பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும், பெண்ணுக்கு தொடர் துன்புறுத்தலைக் கொடுத்துள்ளனர். அதைத் தாங்க முடியாத அப் பெண், 3வது மாடியிலிருந்து நிர்வாணமாக கீழே குதித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பு, ‘பாதிக்கப்பட்டப் பெண், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்க மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விஷயம் குறித்து விசாரணை செய்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது. 

 

.