This Article is From Nov 13, 2018

தேர்தலை தொடர்ந்து சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!

பாதுகாப்பு பணியை முடித்து விட்டு பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது தூப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது.

தேர்தலை தொடர்ந்து சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!

துப்பாக்கி சூடு நிகழ்ந்த பகுதியில் மேலும் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Raipur:

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், இன்று மாலை பாதுகாப்பு படையினரால் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்ட‌தாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் பிடிபட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புஷ்பால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகிலிருக்கும். கிராமத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளதாக சுக்மா மாவட்ட காவல் ஆய்வாளர் அபிஷேக் மீனா பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரிலிருந்து 500கிமீ தொலைவில் இருக்கும் மட்வால் கிராமத்திற்கு அருகில், மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட போது இறந்த இரு மாவோயிஸ்ட்டுகள் உடல்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து இரு மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மாவோயிஸ்ட்கள் பிடியிலிருக்கும் எட்டு மாவட்டங்களில் சுக்மாவும் ஒன்று.
 

.