This Article is From Feb 11, 2019

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் 110 சிறப்பு விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்
  • 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும் என அறிவிப்பு
  • முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு : முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறுகிறது. இன்று தொடங்கி மொத்தம் 3 நாட்களுக்கு இந்த தொடரின்போது தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறும் 

14-ம்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தின்போது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் பதில் அளிக்கிறார். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தின்போது, 110 -விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 

அதில், '' வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மீனவ தொழிலாளர்கள்,  விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்'' என்று கூறியுள்ளார். 
 

.