This Article is From Aug 24, 2018

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உள்பட, தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உள்பட, தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அரசு அறிக்கையின் படி, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பலிவால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தத் துறையில் இருந்த மங்கத் ராம் ஷர்மா, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன், தொல்லியல் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் கூடுதல் இயக்குனர் சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.