This Article is From Oct 05, 2018

ஈரானில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

மீனவர்களை மீட்பது தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ஈரான் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடந்துள்ளது. இதுவரைக்கும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்கு செய்து தரப்படவில்லை. இதற்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விசாக்கள் முடிவடைந்துள்ளன.

எனவே இந்த பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு இந்திய தூதர் மூலமாக தமிழக மீனவர்கள் 6 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.