This Article is From Sep 23, 2018

"பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்" - தமிழக முதலமைச்சர் பேச்சு

"ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படியானால், வாழ்நாள் முழுவதும் அவர் தூங்காமல் இருக்க வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்

விழாவில் பேசிய முதலமைச்சர், “திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய். பொய் பேசுவதற்கு, டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால், அது, ஸ்டாலினுக்கு தான் பொருந்தும். 'மைக்' கிடைத்தால், அதிமுக அரசின் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது அவரது வழக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “செயல் தலைவராக இருந்து திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்படியானால், வாழ்நாள் முழுவதும் அவர் தூங்காமல் இருக்க வேண்டும்” என்று அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.