This Article is From Nov 23, 2019

“இது பாஜக-வின் அரசியல் Surgical Strike”- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!

Maharashtra Politics - தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது.

“இது பாஜக-வின் அரசியல் Surgical Strike”- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!

Maharashtra Politics - யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது

#MaharashtraPolitics - மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பங்கள் நடைபெற்ற நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர், சதர் பவாரும், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும், ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள்.

“இந்த நாடு புதிய வித அரசியலை இன்று பார்த்துள்ளது… பாஜக இன்று செய்திருப்பது இந்திய அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரானது. மகராஷ்டிர மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல… பாஜக, இதைப் போன்ற வேலையைத்தான் நாடு முழுவதும் செய்து வருகிறது. பாஜக, தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மகாராஜா சிவாஜி, எந்த கொள்கையின் அடிப்படையில் நின்றார் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். இது பாஜக நிகழ்த்தியுள்ள சர்ஜிக்கல் ஸ்டிரைக். நாங்கள் ஒன்றாக இருந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம்,” என்று உறுதிபட கூறினார் உத்தவ் தாக்கரே.

அவருக்கு முன்னர் பேசிய சரத் பவார், “அஜித் பவாரைத் தவிர, தேசியவாத காங்கிரஸ் தரப்பிலிருந்து 10 அல்லது 11 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம். உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டன் எப்போதும் பாஜக-வுடன் கூட்டணி சேர மாட்டான். பாஜக, எப்போதும் எந்த வழியில் வேண்டுமானாலும் ஆட்சியமைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளும். தேசியவாத காங்கிரஸில் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அனைத்து கட்சித் தொண்டர்களும் இந்தக் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்,” என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படபடத்தார்.

யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

 தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் முன்னர் விளக்கம் கொடுத்திருந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதும், “அஜித் பவார் மீது கட்சி முறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,“ என்றார் தீர்க்கமாக.
 

.