This Article is From Dec 31, 2018

திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியான திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியான திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை ஜனவரி 3 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. அந்த தேதி முதலே, வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு 28 ஆம் தேதி நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த கருணாநிதி கடந்த அகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.

.