This Article is From Nov 08, 2018

சந்திரபாபு நாயுடு - ஸ்டாலின் சந்திப்பில் கவலை இல்லை: தமிழிசை

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் நேரத்தை குறைத்தது போல், மது விற்பனை செய்வதற்கும் நேரத்தை குறைக்க வேண்டும்

சந்திரபாபு நாயுடு - ஸ்டாலின் சந்திப்பில் கவலை இல்லை: தமிழிசை

சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பில் எங்களுக்கு கவலை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பில் எங்களுக்கு கவலை இல்லை அது பரபரப்பான சந்திப்பு அல்ல, பிசு பிசுப்பான சந்திப்பு என்றார்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் நேரத்தை குறைத்தது போல், மது விற்பனை செய்வதற்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

டாஸ்மாக் வருமானம் ரூ. 602 கோடி என்பது தமிழகத்திற்கு அவமானம். தமிழகம் தீபாவளியை கொண்டாடியதா அல்லது தள்ளாடியதா என்பது தெரியவில்லை.

பணம் மதிப்பீடு நடவடிக்கை இந்த தேசத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தி உள்ளது. பணம் பதுக்கி உள்ளவர்கள் தான் அதுக்குறித்து கவலை அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

.