This Article is From Oct 22, 2018

காஷ்மீரில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

குடும்பத்தினருடன் போலீஸ் கான்ஸ்டபிள் விஜய் குமார் பேசிக் கொண்டிருந்தபோது அவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

புல்வாமா நடந்த சண்டையின்போது, ஸ்னைப்பர் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். புல்வாமா மாவட்டத்தில் ரிசர்வ் போலீசாரின் முகாம் உள்ளது. 

அங்கு போலீஸ் கான்ஸ்டபிள் விஜய் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அருகேயிருந்த மலையில் இருந்து தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டடார்.

இந்த சம்பவத்தில் விஜய் குமாரின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவத்தின்போது ஸ்னைப்பர் ரக துப்பாக்கியை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருக்க கூடும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 

விஜய்குமார் கொல்லப்பட்ட பின்னரும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதற்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எஸ்.எஸ்.பி. எனப்படும் சீமா சஷாஸ்திரா பல் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 

.