This Article is From Oct 09, 2018

பாஜக ஏம்.எல்.ஏ-வின் முகநூல் கணக்கு திருட்டு!

இந்தியாவிற்கு வெளியே இருந்து யாரேனும் தனது முகநூல் பக்கத்தை திருடியிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார்.

பாஜக ஏம்.எல்.ஏ-வின் முகநூல் கணக்கு திருட்டு!

பிஜேபியின் சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் லோத், ஹைதராபாத்தின் கோஷாமஹால் தொகுதியைச் சேர்ந்தவர்.

Hyderabad:

தெலுங்கானா சட்டமன்றத்தின் பிஜேபி உறுப்பினர், அவருடைய முகநூல் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக கூறியுள்ளார்.

கோஷாமால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திங்களன்று ஹைதராபாத்தில் சைபர் கிரைம் போலீஸில் தனது முகநூல் பக்கம் திருடப்பட்டதாக புகார் அளித்தார்.

டி.ராஜா சிங் அளித்த புகாரில் தனது பேஸ்புக் பக்கத்தை 5.35 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து யாரேனும் தனது முகநூல் கணக்கை திருடியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், எனது முகநூல் திருடப்பட்டதில் அதிர்சியடைந்துள்ளேன். போலீஸில் புகார் தெரிவித்துள்ளேன். ஏதேனும் தவறான செய்திகள் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை திருட பலமுறை முயற்சி நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

.