This Article is From Dec 26, 2018

காதலுக்கு எதிர்ப்பு: பெற்ற தாயை மகளே கத்தியால் குத்தி கொலை!

பேஸ்புக் காதலனுடன் வீட்டை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு: பெற்ற தாயை மகளே கத்தியால் குத்தி கொலை!

தேவிபிரியா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Thiruvallur:

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, திருவள்ளூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி தேவிபிரியா. இவர், பேஸ்புக் மூலம் விவேக் என்ற இளைஞருடன் அறிமுகமாகி காதல் வயப்பட்டுள்ளார். நாளடைவில் இவர்கள் காதல் விவகாரம் தேவிபிரியாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தேவிபிரியா வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளார். தேவிபிரியாவின் காதலன் விவேக் துணிகடையில் பணிபுரிந்து வருகிறார். தேவிபிரியாவை அழைத்துச்செல்ல தன்னால் வரமுடியாது என்றும் தனது நண்பர்கள் சதீஸ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை தேவிபிரியா வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரியாவின் தாயார் பானுமதி, அவர் வீட்டை விட்டுச் செல்ல தயாராகி துணிகளை எடுத்து வைத்ததை பார்த்துள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேவிபிரியா காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து சமையல் கத்தியை கொண்டு தாயை குத்தி கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் தேவிபிரியா தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஆனால், இளைஞர்கள் ஆடையில் இருந்த ரத்த கரையை கண்ட ஊர் மக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 3 பேரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

.