This Article is From Sep 23, 2018

செல் போன் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை ; கரூரில் பரபரப்பு

சிறுவனின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை செய்கின்றனர்.

செல் போன் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை ; கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக கூறி மர்ம நபர்கள் அவனிடம் விசாரிக்க வீட்டுக்கு வந்துள்ளனர். மர்ப நபர்கள் சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் சிறுவன் தனது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

இந்நிலையில், சிறுவனின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை தாக்கிய நபர்களை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், செல்போன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.