எதற்காக அந்த இளைஞன் ரயிலின் மேல் பகுதிக்கு சென்றார் என விசாரனை நடத்தப்பட உள்ளது.
Jhabua: கடந்த திங்கட்கிழமையன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள பெரூகார்க் ரயில் நிலையத்தில் இருந்த சரக்கு ரயிலின் பெட்டியில் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது.
'பன்கஜ் என்னும் அந்த 16 வயது இளைஞன், திங்கட்கிழமை மதியம் செல்ஃபி எடுக்க சரக்கு ரயிலின் பெட்டிகளில் மேல் ஏறியதாகவும், அப்போது அங்கு மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரத்தால் தாக்கப்பட்டு பலியானதாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்' என பாமானியா ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரி உதேய் பிரதாப் சிங் கூறினார்.
ஏன் அந்த இளைஞர் ரயில் பெட்டியில் ஏறினார் என விசாரணை நடந்து வருவதாகவும் பாமானியா ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி உதேய் பிரதாப் சிங் தெரிவித்தார்.