This Article is From Nov 20, 2018

பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் டேங்கர் லாரி ஒன்று பஸ் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இங்குள்ள அலிகாரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அலிகாரின் வழியே செல்லும் சாலை ஒன்றில் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி, பஸ் மீது பலத்த வேகத்துடன் மோதியது.

இதில் பஸ்ஸில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 10 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.