This Article is From Dec 16, 2019

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பற்றி மேடையில் உளறிக் கொட்டிய அமைச்சர்… கைதட்டி சிரித்த மக்கள்!

இதற்கு முன்னரும் சீனிவாசன், இப்படி உளறல் பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பற்றி மேடையில் உளறிக் கொட்டிய அமைச்சர்… கைதட்டி சிரித்த மக்கள்!

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பொதுக் கூட்டத்தில், மோடி என்று சொல்வதற்கு பதில் வாஜ்பாய் என்று சொல்லியிருக்கிறார் சீனிவாசன். 

தேனியில் ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கட்சி நிகழ்ச்சி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரை அற்றிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓபிஎஸ் பற்றி உளறிக் கொட்டியுள்ளார். அவரின் இந்த உளறல் பேச்சால் நிகழ்ச்சிக்காக கூடியிருந்த மக்கள் கைதட்டி சிரித்துள்ளனர். 

அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், “தமழிக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாதாரண ஆள் கிடையாது. பல விருதுகள் பெற்றுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அங்கு தங்கத்தமிழ்ச்செல்வன் விருது பெற்றவர்…” என்று சொல்லி ஒரு நிமிடம் திகைத்தார். பின்னர் மேடைக்குப் பின்னால் திரும்பி, “தமிழ்ச்செல்வன் தானே” என்றார். அவர்கள், “இல்லை, தங்கத்தமிழ்மகன் விருது” என்றனர். 

panneerselvam

உடனே, “தங்கத்தமிழ்மகன் விருது பெற்றார் ஓபிஎஸ். தங்கத்தமிழ்ச்செல்வனும் நம்மவர் தானே… அதனால் ஒன்றும் தப்பில்லை” என்று சிரித்து மழுப்பினார். ஆனால், கூடியிருந்த மொத்தக் கூட்டமும் கைதட்டி சிரித்தது. 

இதற்கு முன்னரும் சீனிவாசன், இப்படி உளறல் பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், “எம்ஜிஆர் எப்படி ஆட்சிக்கு வந்தார் தெரியுமா. மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தார். முன்னர் இருந்த ஆட்சியை குறை சொல்லியே ஆட்சி அரியணையில் ஏறினார் எம்ஜிஆர்,” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் சீனிவாசன்.

n3tp32cg

அதேபோல சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பொதுக் கூட்டத்தில், மோடி என்று சொல்வதற்கு பதில் வாஜ்பாய் என்று சொல்லியிருக்கிறார் சீனிவாசன். 

.