This Article is From May 20, 2019

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!

அகவிலைப்படி தற்போது 9 சதவீதமாக இருந்து வந்தது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!

அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 9 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை 12 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியாக கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.