This Article is From May 28, 2020

தமிழகத்தில் கட்டுக்கடங்காத கொரோனா! மொத்த பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியது!!

இன்று மட்டும் தமிழகத்தில் 639 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கட்டுக்கடங்காத கொரோனா! மொத்த பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் ஒரே நாளில் இல்லாத அளவுக்கு 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் உள்ளது
  • ஒரே நாளில் 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • ஒட்டுமொத்த பாதிப்பு தமிழகத்தில் 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் இல்லாத அளவுக்கு 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இன்று மட்டும் தமிழகத்தில் 639 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 145 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொது முடக்கம் வரும் 31-ம்தேதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தகுந்த வகையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 7 பேர் குணம் அடைந்து வீட திரும்பியுள்ளனர். 

.