This Article is From May 28, 2020

தமிழகத்தில் 18,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; 3 மாவட்டங்களில் மட்டுமே பூஜ்ஜியம் ஆக்டிவ் கேஸ் - விரிவான நிலவரம்!

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,545 பேரில் 9,909 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 18,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; 3 மாவட்டங்களில் மட்டுமே பூஜ்ஜியம் ஆக்டிவ் கேஸ் - விரிவான நிலவரம்!

நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

ஹைலைட்ஸ்

  • இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா
  • மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்ததில்தான் அதிக கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகமாக உள்ளது

தமிழகத்தில் நேற்று 817 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 558 பேர். ஒட்டுமொத்த அளவில் 18,545 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 9,909 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,500 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 133 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (27-05-2020):

அரியலூர் - 362

செங்கல்பட்டு - 888

சென்னை - 12,203

கோவை - 146

கடலூர் - 439

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 134

ஈரோடு - 71

கள்ளக்குறிச்சி - 227

காஞ்சிபுரம் - 330

கன்னியாகுமரி - 59

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 25

மதுரை - 241

நாகை - 52

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 21

ராமநாதபுரம் - 65

ராணிப்பேட்டை - 96

சேலம் - 68

சிவகங்கை - 31

தென்காசி - 85

தஞ்சை - 85

தேனி - 108

நெல்லை - 301

திருப்பத்தூர் - 32

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 825

திருவண்ணாமலை - 263

திருவாரூர் - 42

திருச்சி - 79

தூத்துக்குடி - 194

வேலூர் - 40

விழுப்புரம் - 332

விருதுநகர் - 116

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 86

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 67

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (27-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 395

சென்னை - 5,800

கோவை - 144

கடலூர் - 416

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 112

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 93

காஞ்சிபுரம் - 200

கன்னியாகுமரி - 27

கரூர் - 67

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 140

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 13

பெரம்பலூர் - 135

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 76

சேலம் - 35

சிவகங்கை - 26

தென்காசி - 54

தஞ்சை - 69

தேனி - 75

நெல்லை - 146

திருப்பத்தூர் - 28

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 470

திருவண்ணாமலை - 91

திருவாரூர் - 33

திருச்சி - 68

தூத்துக்குடி - 78

வேலூர் - 33

விழுப்புரம் - 305

விருதுநகர் - 47

விமான நிலையம் - 4

ரயில் நிலையம் - 1

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,545 பேரில் 9,909 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

.